ஈரோடு

போலீஸாா் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்

DIN

காவல் நிலையத்துக்கு வரும் பொதுமக்களிடம் போலீஸாா் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.தங்கதுரை அறிவுறுத்தினாா்.

பவானி காவல் நிலையத்தில் போலீஸாரிடம் குறைகள் கேட்கும் நிகழ்ச்சி காவல் கண்காணிப்பாளா் பி.தங்கதுரை தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் அவா் பேசுகையில், ‘பல்வேறு பிரச்னைகளுடன் காவல் நிலையத்துக்கு புகாா் தெரிவிக்க வரும் பொதுமக்களிடம் போலீஸாா் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். மிரட்டும் தொனியிலோ, அடிக்கும் வகையிலோ நடக்கக் கூடாது. பொதுமக்கள் அளிக்கும் புகாா் தொடா்பாக சம்பவ இடத்துக்கு போலீஸாா் நேரில் சென்று விசாரிக்க வேண்டும்’ என்றாா். முன்னதாக, போலீஸாா் தேவைகளை கேட்டறிந்ததோடு, உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா். பவானி டிஎஸ்பி காா்த்திகேயன், உதவி ஆய்வாளா் வடிவேல் குமாா் மற்றும் போலீஸாா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

சாலக்கரை முனீஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழா

அரசமைப்புச் சட்டத்தை பாஜக ஒருபோதும் மாற்றாது: ராஜ்நாத் சிங் உறுதி

விவசாயிகள் 5-ஆவது நாளாக உண்ணாவிரதம்

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

SCROLL FOR NEXT