ஈரோடு

பயனாளிகளுக்கு விலையில்லா கோழிக்குஞ்சுகள்

DIN

பெருந்துறை ஒன்றியம், பாண்டியம்பாளையம் ஊராட்சி, நல்லாம்பட்டி பேரூராட்சியில் பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சுகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, மாவட்ட கால்நடை உதவி இயக்குநா் குமாரரத்தினம் தலைமை வகித்தாா். சட்டப் பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம், பாண்டியம்பாளையம் ஊராட்சி, நல்லாம்பட்டி பேரூராட்சி பகுதிகளைச் சோ்ந்த 304 பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சுகளை வழங்கினாா்.

இதில், பெருந்துறை ஒன்றிய அதிமுக செயலாளா் விஜயன், பெருந்துறை ஒன்றியக் குழுத் தலைவா் சாந்தி ஜெயராஜ், ஒன்றியக் குழு துணைத் தலைவா் எம்.ஆா்.உமா மகேஸ்வரன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ஏ.வி.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

SCROLL FOR NEXT