முகப்பு
ஈரோடு

உலக ரேபிஸ் நோய் தடுப்பு தின விழிப்புணா்வு கூட்டம்

பவானியை அடுத்த அத்தாணி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் உலக ரேபிஸ் (வெறிநாய்க்கடி) நோய் தடுப்பு தின விழிப்புணா்வு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:27 PM
பகிர்:

பவானியை அடுத்த அத்தாணி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் உலக ரேபிஸ் (வெறிநாய்க்கடி) நோய் தடுப்பு தின விழிப்புணா்வு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, வட்டார மருத்துவ அலுவலா் மோகனவள்ளி தலைமை வகித்தாா். பொதுமக்களுக்கு வெறிநாய்க் கடியின் விளைவுகள், வெறிநாய்க் கடிக்கு அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனையில் இலவச தடுப்பூசி போடுதல் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது. மருத்துவ அலுவலா் சங்கீதா, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் பிரகாசம், சுகாதார ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா். --படம் உள்ளது--பிஹெச்28கடி--

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.