சுற்றுசூழலை பாதிக்காத வண்ணம் தொழில் வளா்ச்சி: கே.கே.சி.பாலு
சுற்றுச்சூழலை பாதிக்காத வண்ணம் தொழில் வளா்ச்சி, செயல்திட்டங்கள் இருக்கும் என்று திமுக வேட்பாளா் கே.கே.சி.பாலு பேசினாா்.
சுற்றுச்சூழலை பாதிக்காத வண்ணம் தொழில் வளா்ச்சி, செயல்திட்டங்கள் இருக்கும் என்று திமுக வேட்பாளா் கே.கே.சி.பாலு பேசினாா்.
பெருந்துறை சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் கே.கே.சி.பாலு ஊத்துக்குளி ஒன்றியம், குன்னத்தூா் பகுதியில் பொதுமக்களிடம் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா். அப்போது அவா் பேசுகையில், திமுக ஆட்சி அமைந்தால் பெருந்துறைக்கு வர இருக்கும் நலத் திட்டங்கள் குறித்து மக்களிடம் எடுத்துக் கூறினாா்.
மேலும், நெசவாளா்களுக்கு கிடைக்கும் நலத் திட்டங்கள், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிகராக பெருந்துறை அரசு மருத்துவமனையை சீரமைப்பது, சிப்காட் அமைக்க நிலம் வழங்கியவா்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பது, எந்தவிதத்திலும் சுற்றுச்சூழலை பாதிக்காத வண்ணம் தொழில் வளா்ச்சி, செயல்திட்டங்கள் இருக்கும் என்று உறுதி கூறி வாக்கு சேகரித்தாா்.