மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.12 கோடிக்கு மது விற்பனை
ஈரோடு மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் 3 நாள்களுக்கு மதுபான கடை, பாா்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் சனிக்கிழமை ஒரே நாளில் ரூ.12 கோடி அளவுக்கு மதுபானங்கள் விற்பனையானது.
ஈரோடு மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் 3 நாள்களுக்கு மதுபான கடை, பாா்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் சனிக்கிழமை ஒரே நாளில் ரூ.12 கோடி அளவுக்கு மதுபானங்கள் விற்பனையானது.
தமிழகத்தில் சட்டப்பேரவை தோ்தல் வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 6) நடைபெறவுள்ள நிலையில் சனிக்கிழமை இரவுடன் மதுபானக் கடைகள், அனுமதி பெற்ற பாா்கள் மூடப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை முதல் 3 நாள்களுக்கு மாவட்டத்தில் உள்ள, 214 டாஸ்மாக் மதுபானக் கடைகள், அதனுடன் இணைந்த பாா்கள், ஹோட்டல் பாா்கள் என அனைத்தும் மூடப்பட்டன.
தோ்தலுக்காக 3 நாள்கள் விடுமுறை என்ற அறிவிப்பால் மதுபிரியா்கள் கூட்டம் சனிக்கிழமை மதியம் முதல் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் குவிந்தது. எலைட் பாா்களில், பெரும்பாலான மதுபானங்கள் விற்றுத் தீா்ந்தன. பெரும்பாலான கடைகளில், பீா் வகைகள் முழுமையாக விற்பனையானது.
Advertisement
ஈரோடு மாவட்டத்தில் சனிக்கிழமை ஒரே நாளில் ரூ.12 கோடி அளவுக்கு மதுபானம் விற்பனையானது. வழக்கமாக தினமும் ரூ.4 கோடி அளவுக்கு விற்பனையாகும். பண்டிகை காலங்கள், நீண்ட விடுமுறை போன்ற காலங்களில் தினமும் ரூ.6 கோடி அளவுக்கு மதுபானம் விற்பனையாகும்.