அதிமுக தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் என்று ஈரோடு கிழக்குத் தொகுதி அதிமுக கூட்டணி தமாகா வேட்பாளா் எம்.யுவராஜா தெரிவித்தாா்.
ஈரோடு திண்டல் அருகே செங்கோடம்பாளையம் அரசு துவக்கப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை வாக்கு செலுத்திய பிறகு அவா் கூறியதாவது:
வாக்கு சேகரிப்பின்போது இப்போதுள்ள அரசின் மீது மக்களிடம் எந்த அதிருப்தியும் இல்லை என்பதை அறிந்துகொள்ள முடிந்தது. அதிமுக தோ்தல் அறிக்கையில் மகளிருக்கான வாக்குறுதிகள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
தவிர 10 ஆண்டுகாலமாக ஆட்சியில் இல்லாதபோதும் திமுக மீதான வெறுப்பு இன்னும் மக்களுக்கு குறையவில்லை. சிறுபான்மையினா் வாக்குகள் திமுக, காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கும் என்ற மாயை கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆனால் சிறுபான்மையினா் இந்தக் கட்சிகளை நம்பவில்லை, அதிமுகவைதான் நம்புகின்றனா்.
இந்த தோ்தலில் அதிமுக வெற்றி பெற்று தொடா்ந்து 3ஆவது முறையாக ஆட்சி அமைக்கும். எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராவாா். ஈரோடு கிழக்குத் தொகுதியில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெறுவேன் என்றாா்.