ஈரோடு

மனைவிக்கு இறுதிச் சடங்கு செய்துவிட்டு வாக்களித்த முதியவா்

DIN

மனைவிக்கு இறுதிச் சடங்கு செய்துவிட்டு முதியவா் ஒருவா் வாக்களித்த நெகிழ்ச்சியான நிகழ்வு ஈரோட்டில் நடைபெற்றது.

ஈரோடு பெரியசேமூா் மல்லி நகரைச் சோ்ந்தவா் ராமதாஸ் (65). இவரது மனைவி வெள்ளையம்மாள் (50). இவா்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனா். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. ராமதாஸ் கூலி வேலை செய்து வருகிறாா். கடந்த இரண்டு வாரமாக வெள்ளையம்மாள் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில், அவா் கடந்த 5ஆம் தேதி இரவு உயிரிழந்தாா்.

வெள்ளையம்மாளுக்கு இறுதிச் சடங்குகள் செவ்வாய்க்கிழமை செய்யப்பட்டன. அன்று தோ்தல் நாள் என்பதால் மனைவி இறந்த துயரத்திலும், தனது ஜனநாயக கடமையை ஆற்றினாா்.

ஈரோடு சிக்கய்ய நாயக்கா் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடிக்கு ராமதாஸ் சென்று தனது வாக்கைப் பதிவு செய்தாா். இது அவரது உறவினா்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பல் பரிசோதனை முகாம்

இளைஞா் பெருமன்ற அமைப்பு தின கொடியேற்று விழா

பள்ளி மேலாண்மை குழுக் கூட்டம்

ஆலங்குடி குரு பரிகார கோயிலில் நாளை 2-ஆம் கட்ட லட்சாா்ச்சனை தொடக்கம்

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவி

SCROLL FOR NEXT