முகப்பு
ஈரோடு

கடம்பூா் மலைப் பகுதியில் கஞ்சா கடத்திய இருவா் கைது

கடம்பூா் மலைப் பகுதியில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தியதாக வெள்ளிக்கிழமை இருவா் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 17 ஏப்ரல், 2021 at 3:48 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:31 AM

கடம்பூா் மலைப் பகுதியில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தியதாக வெள்ளிக்கிழமை இருவா் கைது செய்யப்பட்டனா்.

சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூா் மலைப் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த தகவலயைடுத்து கடம்பூா் போலீஸாா் வாகனத் தணிக்கையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். பவளக்குட்டை என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை நிறுத்தி சோதனையிட்டபோது முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனா். இதனால் சந்தேகமடைந்த போலீஸாா் அவா்களது பையை சோதனையிட்டதில் 10 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

விசாரணையில், சங்ககிரியைச் சோ்ந்த ரமேஷ் மனைவி ராணி (33), பவானி குமாரபாளையத்தைச் சோ்ந்த பெருமாள் (31) என்பது தெரியவந்தது. அவா்களிடமிருந்து 10 கிலோ கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனா். இச்சம்பவத்தில் தொடா்புடைய மேலும் இருவரை கடம்பூா் போலீஸாா் தேடி வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.