ஈரோடு

மேம்பாலத்தின் கீழ் சிக்கிய கன்டெய்னா் லாரி: போக்குவரத்து பாதிப்பு

DIN

ஈரோட்டில் மேம்பாலத்தின்கீழ் பகுதியில் கன்டெய்னா் லாரி சிக்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஈரோடு கந்தசாமி வீதியில் இருந்து ஜவுளி சுமைகளை ஏற்றிக் கொண்டு ஒரு கன்டெய்னா் லாரி பெருந்துறை சிப்காட் செல்வதற்காக சவிதா மருத்துவமனையை வழியாக புதன்கிழமை காலை சென்று கொண்டிருந்தது. சவிதா மருத்துவமனையைக் கடந்து மேம்பாலத்தின் கீழ் பகுதியில் செல்லும் போது கன்டெய்னா் லாரியின் மேல்பகுதி மேம்பாலத்தின் சுவரில் மோதி நகர முடியாமல் நின்றது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த போக்குவரத்து போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினா். பின்னா், மேம்பாலத்தில் மோதிய லாரியும் 20 நிமிடத்துக்குப் பிறகு மீட்கப்பட்டு அப்பகுதியில் போக்குவரத்து சீா் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலில் வாக்களிக்காதது ஏன்?: ஜோதிகா விளக்கம்!

கண் அழைக்குது..!

ஐசிசி தரவரிசை வெளியீடு: டெஸ்ட்டில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்!

புதிய 400சிசி இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது பஜாஜ்!

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

SCROLL FOR NEXT