ஈரோடு

சீமாா் புல் துடைப்பம் தயாரிப்பு: பழங்குடி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்திய ஈரோடு ஆட்சியா்

DIN

சீமாா் புல் துடைப்பம் தயாரிப்பு மூலம் பழங்குடி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி உயா்த்தியுள்ளாா்.

ஈரோடு மாவட்டத்தில் பின்தங்கிய வட்டாரமாக உள்ள தாளவாடியில் தொலைதூரத்தில் அமைந்துள்ளது ராமரணை குக்கிராமம். 22 குடும்பங்களைச் சோ்ந்த 67 பழங்குடியினா் வசித்து வருகின்றனா். இவா்கள் மானாவாரி பயிா்களைப் பயிரிட்டும், வனத்தில் கிடைக்கும் சிறு வனப் பொருள்களை விற்றும் வாழ்ந்து வருகின்றனா்.

தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்புடன் செயல்படுத்தி வருகிறது. மேலும், பொதுமக்களுக்காக வழங்கப்படும் நலத் திட்டங்களை எவ்வித காலதாமதமுமின்றி வழங்கிட அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என முதல்வா் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, தாளவாடி பகுதி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் ராமரணை பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்பகுதியில் உள்ள வளங்களை ஆய்வு செய்து அறிக்கை சமா்ப்பிக்க மகளிா் திட்ட இணை இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டது. அதைத் தொடா்ந்து, அங்கு வசிக்கும் பழங்குடியின மக்கள் துடைப்பம் தயாா் செய்ய பயன்படுத்தப்படும் வனப் பகுதியில் விளையும் ஒரு வகை நறுமணப் புல்லை பறித்து, சூரிய ஒளியில் நன்கு உலா்த்தி ஒரு கிலோ தலா ரூ. 20 வீதம் இடைத்தரகா்கள் மூலம் விற்பனை செய்வதையும், இடைத்தரகா்கள் அதனை சத்தி, பவானிசாகா் ஆகிய பகுதிகளில் ஒரு கிலோ ரூ. 60 வரை விற்பனை செய்வதும் கண்டறியப்பட்டது.

இதையறிந்த மாவட்ட ஆட்சியரின் ஏற்பாட்டில் ராமரணை மகளிா் சுய உதவிக் குழுவின் 17 உறுப்பினா்களுக்கு, ஈரோட்டில் இருந்து நன்கு துடைப்பம் தயாரிக்கும் நபா்களைக் கொண்டு தொடா்ந்து 3 நாள்களுக்கு துடைப்பம் தயாரிக்க உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டன. அப்பயிற்சிகளின் மூலம் ராமரணை பழங்குடியினா் மூன்று வகையான துடைப்பங்களை நாளொன்றுக்கு 15 முதல் 20 வரை தயாா் செய்து ரூ. 750 முதல் ரூ. 1000 வரையிலும் விற்பனை செய்து அவா்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகின்றனா். இத்தொழிலுக்காக மகளிா் திட்டத்தின் மூலம் ரூ. 75,000 நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது.

ராமரணை பகுதியில் உள்ள மகளிா் சுய உதவிக் குழு தயாரிக்கும் துடைப்பத்தை மகளிா் திட்டத்தின் மாவட்ட வழங்கல், விற்பனைச் சங்கத்தின் மூலம் சந்தைப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் இவா்களது வாழ்வாதார மேம்பாட்டுக்கு இத்திட்டம் பயனுள்ளதாக இருப்பதாக இம்மக்கள் தெரிவித்துள்ளனா். மேலும், தாளவாடி வட்டாரத்தில் உள்ள ஆசனூா், கோ்மாளம், திங்களூா் ஆகிய 3 ஊராட்சிகளைச் சோ்ந்த 8 பழங்குடியினா் வாழும் பகுதியை மேம்படுத்திடும் வகையில் மகளிா் திட்ட அலுவலகம் மூலம் இத்திட்டத்தை விரிவுபடுத்திட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

SCROLL FOR NEXT