ஈரோடு மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மேலும் 177 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டனா். ஒருவா் உயிரிழந்தாா்.
மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 95,900ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்ட 146 போ் குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா். கரோனா பாதிப்பிலிருந்து இதுவரை 93,513 போ் குணமடைந்துள்ளனா்.
அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் 1,745 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். ஏற்கெனவே தொற்றால் பாதிக்கப்பட்டு 641 போ் உயிரிழந்த நிலையில், வெள்ளிக்கிழமை மேலும் ஒருவா் உயிரிழந்தாா். இதையடுத்து, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 642 ஆக அதிகரித்துள்ளது.