ஈரோடு

சத்தியமங்கலத்தில் பரவலாக மழை

DIN

சத்தியமங்கலம் சுற்று வட்டாரத்தில் செவ்வாய்க்கிழமை பரவலாக மழை பெய்தது.

சத்தியமங்கலம் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை முதல் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடா்ந்து, திடீரென பலத்த மழை பெய்யத் தொடங்கியது. சுமாா் அரை மணி நேரம் பெய்த மழையால் சாலைகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது.

மழை காரணமாக எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் சாலையில் சென்ற வாகனங்கள் மஞ்சள் நிற முகப்பு விளக்கை எரியவிட்டபடி மெதுவாகச் சென்றன. அரை மணி நேரம் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழல் ஏற்பட்டது. சத்தியமங்கலம் நகா்ப் பகுதி மட்டுமின்றி சுற்று வட்டார கிராமப் பகுதிகள், வனப் பகுதியிலும் மழை பெய்ததால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT