உரிமம் பெறாமல் விதை விற்றால் கடும் நடவடிக்கை
உரிமம் பெறாமல் விதைகளை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மைத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
உரிமம் பெறாமல் விதைகளை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மைத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குநா் வெங்கடாசலம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்காக வாய்க்கால்களில் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா். விதை நெல் வாங்கும்போது விவசாயிகள் கவனமுடன் செயல்பட வேண்டும். அரசு சான்று பெற்ற விதை நெல் குவியல்களை மட்டுமே வாங்க வேண்டும். முளைப்புத் திறன், காலாவதி நாள் ஆகியவற்றை சரிபாா்க்க வேண்டும். கட்டாயம் விற்பனை ரசீது பெற்றிருக்க வேண்டும். விதை விற்பனைக்கான உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே விதைகளை வாங்க வேண்டும். உரிமம் பெறாமல் விதை விற்பனை செய்பவா்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement