முதல் வாரத்தில் ரூ.50 கோடி வசூலித்த எல்ஐகே..! இயக்குநர் சொன்னதுபோல ரூ.100 கோடியை எட்டுமா?
இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான எல்ஐகே படத்தின் வசூல் குறித்து...
இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான எல்ஐகே திரைப்படம் முதல் வாரத்தில் ரூ.50 கோடி வசூலைக் கடந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன், நடிகை கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா மற்றும் சீமான் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான எல்ஐகே திரைப்படம் கடந்த ஏப்.10ஆம் தேதி வெளியானது.
எல்ஐகே திரைப்படம் முற்றிலும் ஏஐ, ரோபோ தொழில்நுட்ப விஷயங்களைக் கொண்டு வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
Advertisement
எல்ஐகே முதல் 3 நாள்களில் உலகளவில் ரூ. 28 கோடி வரை வசூலித்துள்ளதது. தற்போது, ரூ.54 கோடி வசூலித்துள்ளது. பிரதீப் ரங்கநாதனின் முந்தைய மூன்று படங்களும் ரூ.100 கோடி வசூலைக் கடந்திருக்கிறது.
படத்தின் வெற்றி விழாவில் இயக்குநர் விக்னேஷ் சிவன், “பிரதீப் ப்ரோ, இந்தப் படமும் ரூ.100 கோடி வசூலிக்கும். கான்ஃபிடன்டா இருங்க, வெற்றி நிச்சயம்” எனக் கூறினார். இந்த நிலையில், படத்துக்கு கிடைத்துள்ள சுமாரான வரவேற்பினால் அந்த இலக்கை எட்டுமா என்ற சந்தேகம் பிரதீப் ரங்கநாதான் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.