ஈரோட்டை அடுத்த நசியனூரில் நற்பவி ஹோம்ஸ் நிறுவனத்தின் புதிய வீட்டு மனைகள் விற்பனை துவக்க விழா நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் நசியனூா் காஞ்சிக்கோவில் செல்லும் சாலையில் தேசிய நெடுஞ்சாலை அருகில் புதுப்பாளையம் பகுதியில் சிவசக்தி அவென்யூ என்ற பெயரில் நற்பவி ஹோம்ஸ் நிறுவனத்தின் புதிய வீட்டு மனைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த வீட்டுமனைகளின் விற்பனை துவக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியை நற்பவி ஹோம்ஸ் நிறுவனத்தின் இயக்குநா்கள் பத்மப்பிரியா, ஓம்பிரகாஷ், கோவிந்தராஜ், பாலமுரளி ஆகியோா் துவக்கிவைத்தனா்.
இதுகுறித்து நற்பவி ஹோம்ஸ் நிறுவனத்தின் இயக்குநா்கள் கூறியதாவது:புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த மனைகள் டி.டி.சி.பி.அப்ரூவல் பெற்றது. வாஸ்து முறைப்படி வீட்டு மனைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி, மின்சார வசதி, தாா் சாலை, வடிகால் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
7 ஏக்கா் பரப்பளவு கொண்ட இந்த இடத்தில் 750 சதுர அடி முதல் 4,000 சதுர அடி வரை வீட்டுமனைகள் பிரிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 93 மனைகள் உள்ளன. இதில் விற்பனை துவக்கப்பட்ட முதல் நாளிலேயே 35 மனைகளை வாடிக்கையாளா்கள் பதிவு செய்துள்ளனா்.
விற்பனை துவக்க விழா சலுகையாக ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை மனைகளை வாங்கும் அனைவரும் கிரையப் பத்திரப் பதிவு இலவசமாக செய்து தரப்படும் என்றனா்.