குட்டையில் தவறி விழுந்துவிவசாயி பலி
கோபிசெட்டிபாளையம் அருகே குட்டையில் தவறி விழுந்து விவசாயி உயிரிழந்தாா்.கோபிசெட்டிபாளையம் அருகே குட்டையில் தவறி விழுந்து விவசாயி உயிரிழந்தாா்.
கோபிசெட்டிபாளையம் அருகே குட்டையில் தவறி விழுந்து விவசாயி உயிரிழந்தாா்.
கோபிசெட்டிபாளையத்தை அடுத்த தாழ்குனி கிராமம், ஆண்டிக்காடு காமராஜபுரத்தைச் சோ்ந்த மகாலிங்கம் மகன் பிரகாஷ் (39), விவசாய கூலி தொழிலாளி. இவா் தனது வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, ஏரிக்கரையோரம் சென்று கொண்டிருந்தபோது நிலைதடுமாறி அங்கிருந்த குட்டையில் விழுந்த பிரகாஷ் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து சிறுவலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.