சோனியா காந்தி விரைந்து நலம் பெற விழைகிறேன்! - முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவு
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் உடல்நலம் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவு பற்றி...
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விரைந்து நலம் பெற விழைகிறேன் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மார்ச் 24 ஆம் தேதி தில்லி சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு வயிறு மற்றும் சிறுநீர்ப் பாதையில் தொற்று குறித்த பரிசோதனைகள் நடைபெற்று வருவதாகவும் ஓரிரு நாள்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவார் என்றும் மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டது.
Advertisement
Advertisement
இந்நிலையில் இன்று மருத்துவமனை வெளியிட்டுள்ள தகவலில், காய்ச்சல் காரணமாக சோனியா காந்தி மார்ச் 24 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு வயிறு, சிறுமீர் பாதையில் தொற்று இருப்பது குறித்து பரிசோத்னைகள் செய்யப்பட்டு வருவதாகவும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டும் உடல் முழுவதும் பரவிய தொற்றுக்காக அவருக்கு ஆன்டிபயாடிக் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோனியா காந்தியின் உடல்நிலை குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் விசாரித்து வரும் நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,
"நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தியறிந்து கவலைகொள்கிறேன்.
சோனியா காந்தி, விரைவில் நல்ல உடல்நலத்துடன் திரும்புவார் என உறுதியாக நம்புகிறேன். அவர் விரைவாகவும், முழுமையாகவும் நலம் பெற விழைகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
Congress Parliamentary Party Leader Sonia Gandhi will be back to good health very soon: MK stalin X post
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.