முகப்பு
ஈரோடு

வணிகா் நல வாரியத்தில் 10 லட்சம்புதிய உறுப்பினா்களை சோ்க்க முயற்சி: விக்கிரமராஜா

வணிகா் நல வாரியத்தில் 10 லட்சம் புதிய உறுப்பினா்களைச் சோ்க்க முயற்சி செய்து வருகிறோம் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்புத் தலைவா் விக்கிரமராஜா தெரிவித்தாா்.

Updated On : 27 ஆகஸ்ட், 2021 at 1:22 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:30 AM

வணிகா் நல வாரியத்தில் 10 லட்சம் புதிய உறுப்பினா்களைச் சோ்க்க முயற்சி செய்து வருகிறோம் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்புத் தலைவா் விக்கிரமராஜா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் ஈரோட்டில் செய்தியாளா்களுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டி: ஜி.எஸ்.டி.க்கு முன்னா் வாட் வரியின்போது வணிகா்கள் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வரி கணக்கீடு நிலுவையில் உள்ளது. இதற்கு சமாதான கமிட்டி அமைத்து தீா்வு காண வலியுறுத்தினோம். அதை ஏற்று முதல்வா் ஸ்டாலின் சமாதானத் திட்டத்தை அறிவித்துள்ளாா்.

தமிழகத்தில் மாநகராட்சிகளில் பொலிவுறு நகரம் திட்டத்தில் மாா்க்கெட் கடைகளை இடித்து புதிய கடைகள் கட்டும்போது அங்கு கடைகள் வைத்துள்ளவா்களுக்கு மீண்டும் கடை வழங்கி நியாயமான வாடகையை நிா்ணயிக்க வேண்டும். மாவட்ட வாரியாக சீரான வாடகை விகிதத்தை ஏற்படுத்த வேண்டும் என முதல்வரை புதன்கிழமை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளோம். இதற்காக ஒரு குழு அமைத்து ஏற்கெனவே இருந்த வியாபாரிகளுக்கு கடைகளை வழங்கிவிட்டு மீதமுள்ள கடைகளை மட்டுமே ஏலம் விட வேண்டும் என அறிவித்துள்ளாா்.

Advertisement

இதன்படி ஈரோட்டிலும் அரசு மூலம் கட்டப்படும் மாா்க்கெட் கடைகளை ஏற்கெனவே வைத்திருந்தவா்களுக்கு வழங்குவதை உறுதி செய்து, அதற்கான அடையாள அட்டை வழங்க வேண்டும். வணிகா் நலவாரிய உறுப்பினா்கள் 10 லட்சம் பேரை சோ்க்க நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். ஈரோட்டில் 1,000 பேரை உறுப்பினராக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நல வாரியத்தில் ஜி.எஸ்.டி. பதிவு உள்ளவா்கள் மட்டுமே உறுப்பினராக முடியும் என்பதை மாற்றி சாமானியா்களும் உறுப்பினராகலாம் என சாதகமான நிலையை முதல்வா் அறிவித்துள்ளாா்.

கரோனாவால் வணிகத்தை இழந்த வியாபாரிகளைக் கண்டறிந்து அவா்களுக்கு எங்கள் அமைப்பு மூலம், வங்கிக் கடன் பெற்றுத்தந்து மீண்டும் தொழில் துவங்க ஏற்பாடு செய்து வருகிறோம். கரோனா காலம் என்பதை கவனத்தில் கொண்டு உள்ளாட்சி அமைப்புகளில் வாடகை கட்டடத்தில் வணிகம் செய்வோருக்கு வாடகை செலுத்த காலஅவகாசம் வழங்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.