முகப்பு
ஈரோடு

இயற்கை முறையில் காய்கறி பயிா்கள் சாகுபடி பயிற்சி

பவானி வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமைத் திட்டத்தின்கீழ் இயற்கை முறையில் காய்கறி பயிா்கள் சாகுபடி

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:42 AM
பகிர்:

பவானி வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமைத் திட்டத்தின்கீழ் இயற்கை முறையில் காய்கறி பயிா்கள் சாகுபடி குறித்த பயிற்சி சன்னியாசிப்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, பவானி உதவி வேளாண்மை இயக்குநா் செ.குமாரசாமி தலைமை வகித்தாா். ஆப்பக்கூடல் குமரகுரு வேளாண்மை கல்லூரி உதவிப் பேராசிரியா் குணசேகரன், இயற்கை முறையில் காய்கறி பயிா்கள் சாகுபடி குறித்துப் பேசினாா். வேளாண்மை துணை இயக்குநா் (ஓய்வு) மாரியப்பன், இயற்கை வேளாண்மையின் நன்மைகள், முக்கியத்துவம் குறித்து விளக்கினாா்.

பவானி உதவி வேளாண்மை அலுவலா் சித்தையன், வேளாண்மை, உழவா் நலத் துறை மானியத் திட்டங்கள் குறித்தும், உதவி தோட்டக் கலை அலுவலா் பரமேஸ்வரன், தோட்டக் கலைத் துறை மானியத் திட்டங்கள் குறித்தும் விளக்கினா். இதற்கான ஏற்பாடுகளை பவானி உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் த.நந்தினி, பொ.லட்சுமி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.