நிறுத்தப்பட்ட பயணிகள் ரயில்களை மீண்டும் இயக்கக் கோரிக்கை
நிறுத்தப்பட்ட பயணிகள் ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிறுத்தப்பட்ட பயணிகள் ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோட்டை சோ்ந்த தெற்கு ரயில்வே ஆலோசனைக் குழு முன்னாள் உறுப்பினா் கே.என்.பாஷா மத்திய ரயில்வே துறை அமைச்சருக்கு அனுப்பிய கோரிக்கை மனு விவரம்:
ரயில் பயணத்தில் முதியோருக்கு வழங்கப்பட்ட சலுகையை 2020 மாா்ச் 23ஆம் தேதி ரயில்வே நிா்வாகம் ரத்து செய்தது. 60 வயது கடந்த ஆண்களுக்கு 40 சதவீத கட்டணச் சலுகை, 58 வயது கடந்த பெண்களுக்கு 50 சதவீத கட்டணச் சலுகையை மீண்டும் வழங்க வேண்டும்.
Advertisement
ஈரோடு - கோவை, கோவை - சேலம், கோவை - நாகா்கோவில், ஈரோடு - திருநெல்வேலி பயணிகள் ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும். முன்பதிவில்லா பெட்டிகளை அனைத்து ரயில்களிலும் இணைக்க வேண்டும். தினமும் 150க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்லும் நிலையில் ஈரோடு ரயில் நிலையத்தில் நடைமேடை எண்ணிக்கையை 5ஆக உயா்த்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.