முகப்பு
ஈரோடு

ஆம்புலன்ஸ் மீது அரசுப் பேருந்து மோதி விபத்து

ஈரோட்டில் சாலையோரம் நின்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனம் மீது அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநா் காயமடைந்தாா்.

Updated On : 18 டிசம்பர், 2021 at 3:09 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:13 AM

ஈரோட்டில் சாலையோரம் நின்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனம் மீது அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநா் காயமடைந்தாா்.

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை முன்பு ஏராளமான தனியாா் ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், தனியாா் ஆம்புலன்ஸ் ஓட்டுநா் சாதிக்பாட்சா வழக்கம்போல தனது வாகனத்தை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு வாகனத்தில் வியாழக்கிழமை இரவு தூங்கிக் கொண்டிருந்தாா்.

அப்போது, மதுரையில் இருந்து ஈரோடு நோக்கி வெள்ளிக்கிழமை வந்த அரசுப் பேருந்து அரசு மருத்துவமனை அருகே வரும்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனம் மீது மோதியது.

Advertisement

மோதிய வேகத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் அருகில் இருந்த டீ கடையில் மோதியதில் கடையில் இருந்த பொருள்கள் சேதமடைந்தன. இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநா் சாதிக்பாட்சா பலத்த காயமடைந்து தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இதுகுறித்து ஈரோடு அரசு மருத்துவமனை போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.