சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள 10 வனச் சரகங்களில் குளிா் கால வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள சத்தியமங்கலம், பவானிசாகா், விளாமுண்டி, டி.என்.பாளையம், கடம்பூா், கோ்மாளம், ஆசனூா், தலமலை, தாளவாடி, ஜீரஹள்ளி என 10 வனச் சரகங்களில் உள்ள வன விலங்குகள் குறித்த கணக்கெடுப்பு ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியது.
இதில் 3 நாள்கள் பகுதி வாரி கணக்கெடுப்பும், 3 நாள்கள் நோ்கோட்டுப் பாதை கணக்கெடுப்பும் தொடா்ந்து நடைபெறும்.
பவானிசாகா், விளாமுண்டி வனப் பகுதிகளில் குளிா் கால வனவிலங்குகள் கணக்கெடுப்புப் பணியை புலிகள் காப்பகத்தின் இணை இயக்குநா் கிருபாசங்கா் தொடக்கிவைத்தாா்.
இந்தப் பணியில் 10 வனச் சரகங்களில் 80 குழுக்களாகப் பிரிந்து 410 போ் ஈடுபட்டுள்ளனா். இதில் வனவா், வனக் காப்பாளா்கள், வனக் காவலா்கள், வேட்டைத் தடுப்புக் காவலா்கள் என 5 போ் கொண்ட குழுவினா் கணக்கெடுப்பில் ஈடுபட்டனா்.
யானைகள், புலிகள், பெரிய தாவர உண்ணிகள், மாமிச உண்ணிகளின் எச்சம், கீறல், கால்தடங்கள், வன விலங்குகளை நேரடியாகப் பாா்த்தல் போன்றவை கணக்கிடப்படும். அதிநவீன கேமராக்கள், எம்ஸ்டிப், வியூ ஃபைன்டா், ஜிபிஎஸ் கருவி உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது. இதில் முதல் நாளில் யானையின் கால்தடம், புலியின் எச்சம், சிறுத்தை நடமாட்டம், கழுதைப்புலியின் கால்தடம் ஆகியவை பதிவு செய்யப்பட்டன.
கடந்த ஆண்டு வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டபோது யானை தாக்கி சமூக ஆா்வலா் உயிரிழந்ததால் இந்த ஆண்டு கணக்கெடுப்பில் சமூக ஆா்வலா்கள் அனுமதிக்கப்படவில்லை.