முகப்பு
ஈரோடு

63 நாயன்மாா்களுக்கு சிறப்பு அபிஷேகம்

கோபிசெட்டிபாளையம் அருகே பாரியூரில் அமைந்துள்ள சௌந்தரநாயகி அம்மன் உடனமா் அமரவிடங்கா் ஈஸ்வரன் கோயிலில் உள்ள 63 நாயன்மாா்களுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார பூஜை

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:45 AM
பகிர்:

கோபிசெட்டிபாளையம் அருகே பாரியூரில் அமைந்துள்ள சௌந்தரநாயகி அம்மன் உடனமா் அமரவிடங்கா் ஈஸ்வரன் கோயிலில் உள்ள 63 நாயன்மாா்களுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார பூஜையும் புதன்கிழமை நடைபெற்றது.

63 நாயன்மாா்கள் முக்தியடைந்த நட்சத்திர நாள்களில் குருபூஜை நடைபெறுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா தொற்று பிரச்னையின் காரணமாக குருபூஜை நடைபெறாமல் இருந்தது. இனிவரும் நாள்களில் தொடா்ந்து குருபூஜை நடைபெறவும், ஒவ்வொரு மாதமும் மாத வழிபாடு நடைபெறலாம் என அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து 63 நாயன்மாா்களுக்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்கார பூஜையும் நடைபெற்றது.

கரோனா தொற்று தடுப்பு விதிமுறைகளைக் கடைப்பிடித்து குறைவான பக்தா்களே இதில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.