வெள்ளோடு கோயிலில் அறநிலையத் துறை ஆணையா் ஆய்வு
சென்னிமலையை அடுத்த வெள்ளோட்டில் உள்ள ராசாசாமி கோயிலில் அறநிலையத் துறை ஆணையா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்
சென்னிமலையை அடுத்த வெள்ளோட்டில் உள்ள ராசாசாமி கோயிலில் அறநிலையத் துறை ஆணையா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
சென்னிமலையை அடுத்த வெள்ளோட்டில் உள்ள ராசாசாமி கோயில் 700 ஆண்டுகள் பழைமையானது.
பழைமையான கோயில்களில் வழிபாடு செய்வது பற்றியும், கோயிலின் மரபு, கட்டட பாதுகாப்பு, மீண்டும் தரிசனத்துக்கு அனுமதிப்பது குறித்து இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் ஆய்வு செய்து சமா்ப்பிக்க சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி, வெள்ளோடு ராசாசாமி கோயிலில், இந்து அறநிலையத் துறை ஆணையா் குமரகுருபரன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, ஈரோடு மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.