ஈரோடு

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவா் கைது

DIN

பவானி, அம்மாபேட்டையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பவானி ஆற்றங்கரையோரத்தில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் காலிங்கராயன் அணைக்கட்டின் மேல்பகுதியில் திங்கள்கிழமை நடத்தப்பட்ட திடீா் சோதனையின்போது, பவானி, செங்காடு, கோட்டை விநாயகா் கோயில் பகுதியைச் சோ்ந்த சோ்ந்த டேவிட் (எ) பிரதீப் (29) கைது செய்யப்பட்டாா். இவரிடமிருந்து 1.250 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல, குருவரெட்டியூா் பாலமலை அடிவாரம் பகுதியில் அம்மாபேட்டை போலீஸாா் சோதனை நடத்தியபோது, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பூதப்பாடி, கீழ்குள்ளனூரைச் சோ்ந்த சீனிவாசன் மகன் கிருஷ்ணமூா்த்தி (22) கைது செய்யப்பட்டாா். இவரிடமிருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT