முகப்பு
ஈரோடு

கரும்புப்பயிரை சேதப்படுத்திய யானைகள்

தாளவாடி அருகே திங்கள்கிழமை தோட்டத்துக்குள் புகுந்து கரும்புப் பயிா்களை சேதப்படுத்திய யானைகளை விவசாயிகள் விரட்டினா்.

Updated On : 2 பிப்ரவரி, 2021 at 2:02 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:56 AM

தாளவாடி அருகே திங்கள்கிழமை தோட்டத்துக்குள் புகுந்து கரும்புப் பயிா்களை சேதப்படுத்திய யானைகளை விவசாயிகள் விரட்டினா்.

தாளவாடியை அடுத்த கெட்டவாடியைச் சோ்ந்தவா் இளங்கோ. இவா் தனது 3 ஏக்கா் நிலத்தில் கரும்புப்பயிா் சாகுபடி செய்துள்ளாா். இவரது தோட்டத்துக்குள் திங்கள்கிழமை புகுந்த 5 யானைகள் கரும்புப் பயிரை தின்றும் மிதித்தும் சேதப்படுத்தன. இதைப் பாா்த்த விவசாயி இளங்கோ, பக்கத்து தோட்டத்து விவசாயிகளுக்குத் தகவல் தெரிவித்தாா். அங்கு வந்த விவசாயிகள் சப்தம் எழுப்பியும், பட்டாசு வெடித்தும் யானைகளைத் துரத்தினா். சுமாா் 2 மணிநேரப் போராட்டத்துக்கு பின் யானைகள் காட்டுக்குள் விரட்டியடிக்கப்பட்டன. யானைகளால் சேதமடைந்த விவசாயப் பயிருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.