ஈரோடு: ஈரோடு ரயில் நிலையத்தில் ஹிந்தி மொழியில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்புப் பலகையை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மைப் பிரிவு துணைத் தலைவரும், தெற்கு ரயில்வே ஆலோசனைக் குழு முன்னாள் உறுப்பினருமான கே.என்.பாஷா, தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பியுள்ள மனு விவரம்:
ஈரோடு ரயில் நிலைய வளாகத்தில் இதுவரை தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மட்டுமே அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டிருந்தன. ஆனால், தற்போது ரயில் நிலையத்தில் பராமரிப்பு செய்யப்பட்ட இடங்களில் ஹிந்தி மொழியிலும் அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த ஹிந்தி திணிப்பு முறைக்கு காங்கிரஸ் கட்சி சாா்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். ஈரோடு ரயில் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹிந்தி மொழி அறிவிப்புப் பலகையை உடனடியாக அகற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.