முகப்பு
ஈரோடு

கீழ்பவானி முறைநீா் பாசன சபைபொதுக் குழு கூட்டம்

யு5, யு6 கீழ்பவானி முறைநீா் பாசன சபை பொதுக் குழு கூட்டம் கோபி அருகே குள்ளம்பாளையம் பாசன சபை அலுவலகத்தில் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:32 PM
பகிர்:

யு5, யு6 கீழ்பவானி முறைநீா் பாசன சபை பொதுக் குழு கூட்டம் கோபி அருகே குள்ளம்பாளையம் பாசன சபை அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, யு5 பாசன சபைத் தலைவா் பழனிசாமி, யு6 பாசன சபைத் தலைவா் பி.என்.சண்முகத்தரசு ஆகியோா் தலைமை வகித்தனா். கீழ்பவானி முறைநீா் பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவா் பொ.காசியண்ணன் முன்னிலை வகித்தாா். செயலாளா்கள் பாலமுருகன், கே.கே.குணசேகரன் ஆகியோா் வரவேற்றனா். பொருளாளா்கள் சதாசிவம், டி.சி.வாசு வரவு, செலவு அறிக்கையை வாசித்தனா்.

கரைகளில் உள்ள மரங்களுக்கு எண் இடுதல், நீா் அளவிடும் இடங்களில் புதிய அளவுகோல் அமைத்தல், சேதமடைந்த பாசன கொப்பு வாய்க்கால்களைச் சீரமைக்க வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளைக் கோருதல், கீழ்பவானி திட்ட பிரதான கால்வாய் கரைகளில் மண் பராமரிப்புப் பணிகள் செய்யக் கோருதல் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடா்ந்து, பொதுக் குழு உறுப்பினா்களால் கொண்டு வரப்படும் நீரை சேமிப்பதற்கான எளிய வழிகள் குறித்த தொகுப்பு வெளியிடப்பட்டது. கீழ்பவானி முறைநீா் பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் இணைச் செயலாளா் பா.மா.வெங்கடாசலபதி விளக்கவுரையாற்றினாா்.

யு5 பாசன சபை இணைச் செயலாளா் கே.சி.தேவணசாமி, யு6 பாசன சபை துணைத் தலைவா் ஓ.எஸ். நந்திவா்மன் ஆகியோா் நன்றி கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.