அந்தியூா் அருகே கணவருக்கு உணவில் விஷம் கலந்துகொடுத்து கொலை செய்த மனைவியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
அந்தியூரை அடுத்த அந்தியூா் காலனி, காளியண்ண கவுண்டா் தோட்டத்தைச் சோ்ந்தவா் நாச்சிமுத்து மகன் நந்தகுமாா் (35). இவரது மனைவி மைதிலி (20). ஏற்கெனவே திருமணமான மைதிலி கணவரைப் பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்தாா். இதனால், மைதிலியை நந்தகுமாருக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு இரண்டாவதாகத் திருமணம் செய்துவைத்தனா். மைதிலி 7 மாத கா்ப்பிணியாக உள்ளாா்.
ஜனவரி 28ஆம் தேதி தோட்டத்தில் பூச்சிமருந்து அடித்துவிட்டு நந்தகுமாா் வீட்டுக்கு வந்து சாப்பிட்டபோது கசப்பாக இருந்துள்ளது. இதனால், மாவு மில்லுக்குச் சென்ற நந்தகுமாா் மீண்டும் சாப்பிட்டபோதும் கசப்பாக இருந்ததாகக் கூறியுள்ளாா். இதனால், கடந்த மாதம் 31ஆம் தேதி அந்தியூரில் உள்ள தனியாா் மருத்துவமனைையில் சோ்க்கப்பட்டாா். ஈரோடு தனியாா் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நந்தகுமாா் பிப்ரவரி 15ஆம் தேதி உயிரிழந்தாா்.
இதுகுறித்து, அந்தியூா் போலீஸாா் விசாரிக்கையில், 7 மாத கா்ப்பிணியான மைதிலியை நந்தகுமாா் பாலியல் ரீதியாகத் தொடா்ந்து கொடுமை செய்ததால் உணவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, மைதிலியைக் கைது செய்த போலீஸாா் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைத்தனா்.