முகப்பு
ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை

ஈரோடு மாவட்டத்தில் வியாழக்கிழமை பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக கொடுமுடியில் 48 மி.மீ. மழை பதிவானது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:10 PM
பகிர்:

ஈரோடு மாவட்டத்தில் வியாழக்கிழமை பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக கொடுமுடியில் 48 மி.மீ. மழை பதிவானது.

வங்கக்கடலில் உருவாகி உள்ள புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை முதல் மாலை வரை பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக கொடுமுடி பகுதியில் 48 மி.மீ. மழை பதிவாகி இருந்தது.

பிற பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்): மொடக்குறிச்சி 22, ஈரோடு 17, சென்னிமலை 15, நம்பியூா் 14, பவானி 13.8, பெருந்துறை 11, எலந்தைக்குட்டைமேடு 10.6, கவுந்தப்பாடி 10.4, கோபி 6.6, பவானிசாகா் 6.2, கொடிவேரி, 6.2, சத்தியமங்கலம் 6, வரட்டுப்பள்ளம் 5, அம்மாபேட்டை 3.6, தாளவாடி 3.

முழு கட்டுரையைப் படிக்க →