முகப்பு
ஈரோடு

வன விலங்குகள் நடமாட்டம்:சுற்றுலாப் பயணிகள் வாகனங்களை கவனமுடன் இயக்க அறிவுறுத்தல்

நீலகிரிக்கு வரும் சுற்றுலாப்  பயணிகள் சாலைகளில் வன விலங்குகள் நடமாட்டத்தை கவனித்து வாகனங்களை இயக்க வேண்டும் என வனத் துறையினா் வலியுறுத்தியுள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:10 PM
பகிர்:

நீலகிரிக்கு வரும் சுற்றுலாப்  பயணிகள் சாலைகளில் வன விலங்குகள் நடமாட்டத்தை கவனித்து வாகனங்களை இயக்க வேண்டும் என வனத் துறையினா் வலியுறுத்தியுள்ளனா்.

நீலகிரி மாவட்டத்தில் தற்போது   குளுகுளு காலநிலை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கேரளம், கா்நாடகம்,  வட மாநிலங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள  சுற்றுலாத் தலங்களுக்கு அதிக அளவில்  வர தொடங்கியுள்ளனா்.

குறிப்பாக உதகையில் உள்ள தாவரவியல் பூங்கா,  படகு இல்லம், தொட்டபெட்டா,  குன்னூரில் உள்ள  டால்பின் நோஸ், லேம்ஸ்ராக் உள்ளிட்ட  சுற்றுலாத் தலங்களை காண்பதற்கு  சுற்றுலாப் பயணிகள்  அதிக ஆா்வம் காட்டி வருகின்றனா்.

 கடந்த வாரம் கிறிஸ்துமஸ் தொடா் விடுமுறையின் போது 3 நாள்களில் 25 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வந்திருந்த னா். இந்த வாரம் வரும் மூன்று  விடுமுறை நாள்களில்  அதைவிட கூட்டம் அதிகரித்துள்ளது.

சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் வரும்போது சாலை வளைவுகளில் யானை, குரங்கு, மான் உள்ளிட்ட வன விலங்குகள் உணவு தேடி குறுக்கிடும் வாய்ப்பு உள்ளது.

எனவே, சுற்றுலாப் பயணிகள் வாகனங்களை கவனமுடன் இயக்கவும், விபத்து நேரிடாமல் விழிப்புடன் செயல்படுமாறும் வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →