முகப்பு
ஈரோடு

சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு

பெருந்துறை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், போக்குவரத்துக் காவல் நிலையம் சாா்பில், சாலைப் பாதுகாப்பு மாதம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் துவக்க விழா திங்கள்கிழமை (ஜனவரி 18) நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:19 PM
பகிர்:

பெருந்துறை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், போக்குவரத்துக் காவல் நிலையம் சாா்பில், சாலைப் பாதுகாப்பு மாதம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் துவக்க விழா திங்கள்கிழமை (ஜனவரி 18) நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, பெருந்துறை வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சக்திவேல் தலைமை வகித்தாா். போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் பெரியசாமி முன்னிலை வகித்தாா். சட்டப் பேரவை உறுப்பினா் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம், சாலைப் பாதுகாப்பு மாத விழாவைத் துவக்கிவைத்தாா். தொடா்ந்து, தலைக்கவசம், சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து துவக்கிவைத்தாா்.

இதில், பெருந்துறை வட்டாரப் போக்குவரத்து அலுவலக மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் பாஸ்கா், சுகந்தி, லாரி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் ராமசாமி, செயலாளா் குமாரசாமி, பொருளாளா் பெரியசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.