கரூரில் போட்டியிடும் தவெக மாவட்ட செயலாளர் மதியழகன்..! கூட்ட நெரிசல் வழக்கில் கைதானவர்!
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கரூரில் போட்டியிடும் மதியழகன் குறித்து...
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கரூரில் வி.பி. மதியழகன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் கூட்ட நெரிசலில் அந்த மாவட்ட செயலாளாரக இருந்த மதியழகன் கைது செய்யப்பட்டு 15 நாள்கள் காவலில் இருந்து ஜாமீனில் வெளிவந்ததும் குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் இடையே நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.
Advertisement
Advertisement
தவெக தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறார். கரூர் கூட்ட நெரிசல் தவெக கட்சிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கோட்டையாக கருதப்பட்டு வந்த கரூர் தொகுதியில் இருந்து அவர் மாற்றபட்டு இந்தமுறை கோவை தெற்கில் போட்டியிடுவதும் குறிப்பிடத்தக்கது.
Karur stampede district secretary Mathiyazhagan to contest in Karur!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.