முகப்பு
தமிழ்நாடு

கரூரில் போட்டியிடும் தவெக மாவட்ட செயலாளர் மதியழகன்..! கூட்ட நெரிசல் வழக்கில் கைதானவர்!

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கரூரில் போட்டியிடும் மதியழகன் குறித்து...

Updated On : 29 மார்ச் 2026, 12:31 pm IST
தவெக தலைவர் விஜய்யுடன் மதியழகன். - படம்: எக்ஸ் / மதியழகன்
பகிர்:

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கரூரில் வி.பி. மதியழகன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கரூர் கூட்ட நெரிசலில் அந்த மாவட்ட செயலாளாரக இருந்த மதியழகன் கைது செய்யப்பட்டு 15 நாள்கள் காவலில் இருந்து ஜாமீனில் வெளிவந்ததும் குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் இடையே நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.

Advertisement

Advertisement

தவெக தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறார். கரூர் கூட்ட நெரிசல் தவெக கட்சிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் கோட்டையாக கருதப்பட்டு வந்த கரூர் தொகுதியில் இருந்து அவர் மாற்றபட்டு இந்தமுறை கோவை தெற்கில் போட்டியிடுவதும் குறிப்பிடத்தக்கது.

summary

Karur stampede district secretary Mathiyazhagan to contest in Karur!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.