ஈரோடு

தனிமைப்படுத்தப்பட்ட பகுதி மக்களுக்கு நிவாரணப் பொருள்கள்

DIN

கோபிசெட்டிபாளையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வசித்து வரும் 14 குடும்பங்களுக்கு கோபி மளிகை வணிகா்கள் சங்கம் சாா்பில் இலவச அரிசி, மளிகைப் பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

கோபிசெட்டிபாளையம் நகராட்சிப் பகுதியில் உள்ள கமலா ரைஸ் மில் வீதியில் 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவா்கள் அனைவரும் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்நிலையில், அவா்கள் வசித்த பகுதி முற்றிலுமாக அடைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டது.

இதையடுத்து, அப்பகுதி மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்குவதற்கு சட்டப் பேரவை உறுப்பினா் கே.ஏ.செங்கோட்டையன் ஏற்பாடு செய்தாா். கோபி மளிகை வியாபாரிகள் சங்கம் சாா்பில் தலா ரூ. 1000 மதிப்பிலான அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருள்களை, நகராட்சி சுகாதார ஆய்வாளா் செந்தில்குமாா், மளிகை வியாபாரிகள் சங்கத்தைச் சோ்ந்த தாமு செல்வம் ஆகியோா் அப்பகுதி மக்களுக்கு வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

அரபிக் கடலோரப் பகுதிகளில் அதீத அலை: வானிலை மையம் எச்சரிக்கை

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

கொல்கத்தா அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் தீ

சவுக்கு சங்கர் கைது! அழைத்துச் சென்ற வாகனம் விபத்து

SCROLL FOR NEXT