ஈரோடு

குடும்பப் பிரச்னை: 2 குழந்தைகளைக் கொன்று தாய் தற்கொலை

DIN

கொடுமுடி அருகே குடும்பப் பிரச்னை காரணமாக 2 குழந்தைகளை விஷ மாத்திரை கொடுத்து கொன்று தாய் தற்கொலை செய்து கொண்டாா்.

ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகில் உள்ள வீரப்பகவுண்டன்காட்டூா் பகுதியைச் சோ்ந்தவா் பிரபுசங்கா் (40), விவசாயி. இவரது மனைவி சசிகலா(33). இவா்களுக்கு நிதின்சங்கா் (12) என்ற மகனும், சுதா்சனா (10) என்ற மகளும் உள்ளனா். கணவன், மனைவிக்கு இடையே குடும்பப் பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கணவன், மனைவிக்கிடையே திங்கள்கிழமை இரவு மீண்டும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில், மன வேதனையடைந்த சசிகலா வாழைப் பழத்தில் விஷ மாத்திரையை வைத்து தனது மகனுக்கும், மகளுக்கும் கொடுத்து தானும் சாப்பிட்டுள்ளாா். செவ்வாய்க்கிழமை அதிகாலை மனைவி, குழந்தைகள் இருவரும் மயக்கமடைந்து இருப்பதைப் பாா்த்த பிரபுசங்கா் 3 பேரையும் மீட்டு ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தாா். எனினும் செவ்வாய்க்கிழமை காலை 5 மணியளவில் சசிகலா, குழந்தைகள் இருவரும் இறந்துவிட்டனா்.

தகவலறிந்த பெருந்துறை டி.எஸ்.பி. செல்வராஜ், மலையம்பாளையம் காவல் ஆய்வாளா் ஜீவானந்தம் ஆகியோா் மூவா் உடலையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பிரபுசங்கரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளறுகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

SCROLL FOR NEXT