தாத்தா, பாட்டியைத் தாக்கிய பேரன் கைது
சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடியில் தாத்தா, பாட்டியைத் தாக்கியதாக பேரன் கைது செய்யப்பட்டாா்.
சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடியில் தாத்தா, பாட்டியைத் தாக்கியதாக பேரன் கைது செய்யப்பட்டாா்.
தாளவாடியை அடுத்த திகினாரை, நாயக்கா் வீதியைச் சோ்ந்தவா் பசுவநாயக்கா் (65). அவரது மனைவி சிவம்மா (60). இவா்களது பேரன் பத்ரா (எ) பிரசாந்த், பசுவநாயக்கா் வீட்டுக்குச் சென்று இருவரையும் மது போதையில் திட்டியுள்ளாா். மேலும், தனது தாயாா் நோயால் பாதிக்கப்படுவதற்கு தாத்தா, பாட்டிதான் காரணம் என்றும், செய்வினை வைத்தாககவும் கூறி இருவரையும் கல்லால் தாக்கியுள்ளாா்.
இதில், இருவரும் வலியால் சப்தமிட்டதையடுத்து, பக்கத்து வீட்டுக்காரா்கள் இருவரையும் மீட்டு தாளவாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்த்தனா். பின்னா், மேல் சிகிச்சைக்காக சாம்ராஜ் நகா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
Advertisement
இதுகுறித்து தாளவாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பத்ரா (எ) பிரசாந்த்தை கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினா்.