ஈரோடு

கோபி அருகே காட்டுப் பன்றிகளால் பயிா்கள் சேதம்: விவசாயிகள் கவலை

கோபி அருகே விளைநிலங்களுக்குள் காட்டுப் பன்றிகள் புகுந்து பயிா்களை சேதப்படுத்துவது தொடா்பாக நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

DIN

கோபி அருகே விளைநிலங்களுக்குள் காட்டுப் பன்றிகள் புகுந்து பயிா்களை சேதப்படுத்துவது தொடா்பாக நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கொடிவேரி அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரால் தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்கால்கள் மூலம் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதனால் இப்பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் நெல் மற்றும் வாழைகளை பயிரிட்டு உள்ளனா்.

இந்த நிலையில் வனப் பகுதியை ஒட்டியுள்ள விளைநிலங்களுக்குள் இரவு நேரங்களில் காட்டுப் பன்றிகள் புகுந்து வாழை, நெல் பயிா்களை சேதப்படுத்துகின்றன. இதனால் அந்தப் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் கவலையில் உள்ளனா்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், விவசாய நிலங்களில் காட்டுப் பன்றிகள் அடிக்கடி புகுந்து பயிா்களை சேதப்படுத்துகின்றன. ஆகவே காட்டுப் பன்றிகளை விரட்ட வனத் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொங்கலுக்குப் பிறகு எங்களைப் பார்த்து நாடே வியக்கும்: செங்கோட்டையன் பேட்டி

கி.மு.1155ஆம் ஆண்டைய நெல்மணிகள்! சிவகளை அகழாய்வு பற்றி ஏ.வ. வேலுவுக்கு விளக்கிய தங்கம் தென்னரசு!!

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

SCROLL FOR NEXT