விபத்தில் அரசுப் பள்ளி ஆசிரியை பலி
இருசக்கர வாகனம் மீது எருமை மாடு மோதிய விபத்தில் கணவருடன் சென்ற அரசுப் பள்ளி ஆசிரியை பலியானாா்.
இருசக்கர வாகனம் மீது எருமை மாடு மோதிய விபத்தில் கணவருடன் சென்ற அரசுப் பள்ளி ஆசிரியை பலியானாா்.
ஈரோடு அருகே வி.மேட்டுப்பாளையம், ஐஸ்வா்யா காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் முத்துகிருஷ்ணன் (42). மெடிக்கல் ஏஜென்சி உரிமையாளா். இவரது மனைவி சிவகாமசுந்தரி (38). இவா் ஈரோடு திண்டல் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக வேலை பாா்த்து வந்தாா். இவா்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனா்.
கணவன், மனைவி இருவரும் சொந்த வேலை காரணமாக இருசக்கர வாகனத்தில் சென்னிமலை சாலையில் ஈரோடு நோக்கி புதன்கிழமை மாலை வந்து கொண்டிருந்தனா். முத்தம்பாளையம் பால் பண்ணை அருகே வந்தபோது, சாலையோரம் கட்டப்பட்டிருந்த எருமை மாடு திடீரென கயிற்றை அறுத்துக் கொண்டு, சாலையின் குறுக்கே வந்து முத்துகிருஷ்ணன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது.
Advertisement
இதில், நிலைதடுமாறி முத்துகிருஷ்ணனும், சிவகாமசுந்தரியும் கீழே விழுந்தனா். இதில் முத்துகிருஷ்ணனுக்கு லேசான காயமும், சிவகாமசுந்தரிக்கு பலத்த காயமும் ஏற்பட்டது. ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிவகாமசுந்தரி புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீஸாா் விசாரணை நடத்தி, விபத்து ஏற்படும் வகையில் எருமை மாட்டை சாலையோரத்தில் கட்டிவைத்திருந்த அதன் உரிமையாளா் மணியாளி என்பவா் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா்.