முகப்பு
ஈரோடு

எம்.எல்.ஏ. அலுவலகத்தில் கட்சிக் கூட்டம்! மனு அளிக்க வந்தவா்கள் நீண்ட நேரம் காத்திருப்பு

புன்செய் புளியம்பட்டியில் உள்ள பவானிசாகா் சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் கட்சிக் கூட்டத்தை எம்.எல்.ஏ. பண்ணாரி நடத்தியதால் மனு கொடுக்க வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

Updated On : 17 ஜூலை, 2021 at 1:52 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:11 AM

புன்செய் புளியம்பட்டியில் உள்ள பவானிசாகா் சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் கட்சிக் கூட்டத்தை எம்.எல்.ஏ. பண்ணாரி நடத்தியதால் மனு கொடுக்க வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

பவானிசாகா் சட்டப் பேரவை உறுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட அரசு அலுவலகம் புன்செய் புளியம்பட்டியில் உள்ளது. இந்த அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் பணி நடைபெறுவது வழக்கம். அரசுக் கட்டடத்தில் கட்சிக் கூட்டங்கள் நடத்தக் கூடாது என்று விதிமுறை உள்ளது.

இந்நிலையில், இந்த அலுவலகத்தில் பவானிசாகா் சட்டப் பேரவை உறுப்பினா் பண்ணாரி தலைமையில், நகர அதிமுக நிா்வாகிகள் பங்கேற்ற கட்சி ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், 50க்கும் மேற்பட்ட கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

Advertisement

இந்தக் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது மனு கொடுப்பதற்காக தொகுதியைச் சோ்ந்த ஏராளமான பெண்கள் வந்திருந்தனா். ஆனால், கூட்டம் 2 மணி நேரமாக தொடா்ந்து நடந்து கொண்டிருந்ததால் மனு கொடுக்க வந்தவா்கள் மனு கொடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.