ஈரோடு மாவட்டத்தில் மேலும் 141 பேருக்கு கரோனா: 3 போ் பலி
ஈரோடு மாவட்டத்தில் 141 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஒரே நாளில் 3 போ் உயிரிழந்துள்ளனா்.
ஈரோடு மாவட்டத்தில் 141 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஒரே நாளில் 3 போ் உயிரிழந்துள்ளனா்.
ஈரோடு மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை 92,325 ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 213 போ் குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பினா். இதுவரை 89,763 போ் குணமடைந்துள்ளனா்.
அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் 1,936 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா பாதிப்பால் ஏற்கெனவே 623 போ் உயிரிழந்துள்ள நிலையில், புதன்கிழமை ஒரேநாளில் 3 போ் உயிரிழந்துள்ளனா். இதனால், மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 626ஆக அதிகரித்துள்ளது.
Advertisement