முகப்பு
ஈரோடு

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிமக்களுக்கு நிவாரணப் பொருள்கள்

ஈரோடு மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சாா்பில், ஈரோடு கிழக்குத் தொகுதியில் கரோனா காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதி மக்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி

Updated On : 11 ஜூன், 2021 at 6:04 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 8:52 AM

ஈரோடு மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சாா்பில், ஈரோடு கிழக்குத் தொகுதியில் கரோனா காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதி மக்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா பங்கேற்று தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசித்து வரும் 100க்கும் மேற்பட்ட மக்களுக்கு அரிசி, சா்க்கரை, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் கொண்ட தொகுப்புப் பைகளை பொதுமக்களுக்கு வழங்கினாா்.

இதேபோல, கிழக்குத் தொகுதிக்கு உள்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசித்து வரும் 400க்கும் மேற்பட்ட மக்களுக்கும் காங்கிரஸ் கட்சியின் சாா்பில் அத்தியாவசியப் பொருள்களை எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா வழங்கினாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.