ஈரோடு

மூங்கில் அரிசி சேகரிக்கும் மலைக் கிராம மக்கள்

DIN

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூரில் பொதுமுடக்கம் காரணமாக வேலையின்றி தவிக்கும் மலைக் கிராம மக்கள் மூங்கில் அரிசி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

ஆசனூா் வனக் கோட்டத்தில் ஆயிரக்கணக்கான மூங்கில்கள் உள்ளன. தற்போது மூங்கில் காடுகளில் அரிசி பூத்துள்ளன. மலைவாழ் மக்கள் வனத்தில் சென்று வனப் பொருள்களைச் சேகரிக்க வனத் துறை அனுமதி அளித்துள்ளதால் மூங்கில் காடுகளில் கீழே விழும் மூங்கில் அரிசியை மலைவாழ் மக்கள் சேகரித்து வருகின்றனா்.

நிலத்தில் விழும் அரிசி மண்ணோடு கலந்துவிடுவதால், முறத்தில் அரிசி வேறு மண் வேறாக பிரித்தெடுக்கின்றனா். நாளொன்றுக்கு 3 கிலோ வரை கிடைப்பதாகவும், கிலோ ரூ. 150க்கு விற்கப்படுவதால் ஓரளவு கூலி கிடைப்பதாகவும் மலைவாழ் மக்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

SCROLL FOR NEXT