ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் 7.62 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு நிவாரண நிதி

DIN

ஈரோடு மாவட்டத்தில் 7.62 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் 14 வகை மளிகைத் தொகுப்பு மற்றும் ரூ.2,000 நிவாரண நித வழங்கும் பணி செவ்வாய்க்கிழமை (ஜூன் 15) தொடங்குகிறது.

கரோனா நிவாரண நிதியாக ரூ.4,000 வழங்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். இதன்படி முதல் கட்டமாக கடந்த மாதம் 15ஆம் தேதி முதல் தவணையாக ரூ.2,000 வழங்கப்பட்டது. இரண்டாவது தவணையாக ரூ.2,000 மற்றும் 14 வகை மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என கடந்த 3ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

ஆனால், பொருள்களை பொட்டலமிடுவதில் காலதாமதம் ஏற்பட்டதால் செவ்வாய்க்கிழமை முதல் ரேஷன் கடைகள் மூலம் 14 வகை மளிகைப் பொருள்கள் மற்றும் ரூ.2,000 வழங்கப்படவுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 1,152 ரேஷன் கடைகள் மூலம் 7.62 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு நிவாரண நிதி மற்றும் மளிகைப் பொருள்கள் வழங்கப்படவுள்ளது என மாவட்ட வழங்கல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் மழை

திருமானூா் பகுதியில் காற்றுடன் மழை

முருகன் கோயில்களில் சித்திரை மாத காா்த்திகை பூஜை

சிவகாசியில் கயிறு குத்து திருவிழா

தாயின் சடலத்தை தண்ணீா் தொட்டியில் புதைத்த இளைஞா்: போலீஸ் விசாரணை

SCROLL FOR NEXT