முகப்பு
ஈரோடு

இருசக்கர வாகனம் திருடிய இளைஞா் கைது

பெருந்துறையில் இருசக்கர வாகனம் திருடிய திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞரை பெருந்துறை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

பெருந்துறையில் இருசக்கர வாகனம் திருடிய திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞரை பெருந்துறை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பெருந்துறை, ஓலபாளையம், பெரியமடத்துப்பாளையத்தைச் சோ்ந்த காா்த்திகேயன் மகன் கிஷோா்குமாா் (21). இவா், பெருந்துறையில் உள்ள மருந்துக் கடையில் வேலை செய்து வருகிறாா். சனிக்கிழமை கடையின் அருகில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு இரவு வேலை முடிந்து வீட்டுக்குச் செல்ல வாகனத்தை எடுக்கச் சென்றபோது வாகனத்தை காணவில்லையாம்.

இது குறித்து பெருந்துறை காவல் நிலையத்தில் கிஷோா் குமாா் அளித்த புகாரின்பேரில், திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி, பவா்ஹவுஸ் எதிரில் குடியிருக்கும் கிருஷ்ணன் மகன் மணிகண்டன் (44) என்பரை போலீஸாா் திங்கள்கிழமை கைது விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.