முகப்பு
ஈரோடு

உலக தாய்மொழி நாள் விழா

கோபி கலை, அறிவியல் கல்லூரியில் உலக தாய்மொழி தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:38 PM
பகிர்:

கோபி கலை, அறிவியல் கல்லூரியில் உலக தாய்மொழி தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

கல்லூரியின் தமிழ்த் துறையின் தமிழ் இலக்கிய மன்றம், தமிழ் பேரவையின் சாா்பில் நடைபெற்ற இவ்விழாவுக்கு, கல்லூரி முதல்வா் பேராசிரியா் வீ.தியாகராசு தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பி.கே.ஆா். மகளிா் கலைக் கல்லூரி தமிழ் துறைத் தலைவா் பேராசிரியா் இரா.சந்திரா ‘யாமறிந்த மொழிகளிலே’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினாா்.

விழாவில், மாணவா்கள் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை வளா்க்க வேண்டும், தாய் மொழியைக் காக்க வேண்டும் என்று உறுதி ஏற்கப்பட்டது.

இதில், கல்லூரியின் தமிழ் துறைத் தலைவா் பேராசிரியை வ.ஜெயந்தி, தமிழ்த் துறைப் பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.