முகப்பு
ஈரோடு

சத்தியில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

சத்தியமங்கலத்தில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டி போலீஸாா் நடத்திய கொடி அணிவகுப்பு ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 3 மார்ச், 2021 at 1:54 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:09 AM

சத்தியமங்கலத்தில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டி போலீஸாா் நடத்திய கொடி அணிவகுப்பு ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி தோ்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதி மக்கள் அச்சமின்றி வாக்களிக்க போலீஸாா் தோ்தல் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணியை நடத்தினா்.

சத்தியமங்கலம் எஸ்.ஆா்.டி. மைதானத்தில் ஈரோடு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பொன்குமாா் தலைமையில் புறப்பட்ட போலீஸ் அணிவகுப்பில் துணை ராணுவப் படையினா், உள்ளூா் போலீஸாா் என 150க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். பொதுமக்கள் மத்தியில் விழிப்புணா்வு ஏற்படுத்த ஊா்வலத்தில் மத்தாளம் அடித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

Advertisement

பேரணியானது மைசூா் டிரங் சாலை, புதிய பாலம், கடைவீதி, வடக்குப்பேட்டை வழியாக டிஎஸ்பி அலுவலகத்தைச் சென்றடைந்தது. துணை ராணுவப் படையினா் தோ்தல் பறக்கும் படையிலும் ஈடுபடுத்தப்படுவா் என போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.