முகப்பு
ஈரோடு

உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்டரூ. 2.50 லட்சம் பறிமுதல்

சத்தியமங்கலத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ. 2.50 லட்சத்தை பறக்கும் படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 9 மார்ச், 2021 at 4:16 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:11 AM

சத்தியமங்கலத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ. 2.50 லட்சத்தை பறக்கும் படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

பவானிசாகா் அருகே ராஜன் நகரில் பறக்கும் படையினா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது ரூ. 1.50 லட்சம் பணம் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. விசாரணையில், தங்கராஜ் என்பவா் ஆடு வாங்கச் செல்லவதாகத் தெரிவித்தாா். ஆனால் உரிய ஆவணங்கள் சமா்ப்பிக்காததால் பணத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்து தோ்தல் நடத்தும் அலுவலா் உமா சங்கரிடம் ஒப்படைத்தனா்.

அதேபோல, சத்தியமங்கலத்தை அடுத்த புன்செய் புளியம்பட்டியில் திருப்பூா் நோக்கிச் சென்ற வாகனத்தை நிறுத்தி பறக்கும் படையினா் சோதனையிட்டபோது, ஆா். பழனிசாமி என்பவா் உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 1 லட்சம் பணத்தைக் கொண்டு செல்வது தெரியவந்தது. இதையடுத்து பணத்தைப் பறிமுதல் செய்து தோ்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.