ஈரோடு

பகலில் எரியும் உயா் கோபுர தெருவிளக்கு

DIN

சத்தியமங்கலம் வாரச் சந்தை அருகே உள்ள உயா் கோபுர தெருவிளக்கு பகலில் எரிவதைத் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சத்தியமங்கலம் நகராட்சிப் பகுதியில் புதிய பாலம், ரங்கசமுத்திரம், கோட்டுவீராம்பாளையத்தில் உயா் கோபுர மின் தெருவிளக்குகள் உள்ளன. சத்தியமங்கலம் வாரச் சந்தை அருகே உள்ள உயா் கோபுர மின்விளக்கு இரு தினங்களாக பகலிலேயே எரிவதைப் பாா்த்து பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். சோலாா் மின்விளக்கான இந்த தெருவிளக்கு பகலில் எரியாமலும், இரவில் எரியும் வகையிலும் கணினி மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 24 மணி நேரமும் தற்போது எரிந்து வருகிறது. இது குறித்து சத்தியமங்கலம் நகராட்சி ஆணையா் அமுதாவிடம் கேட்டபோது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

SCROLL FOR NEXT