அந்தியூரில் விவசாயிகளுக்குரூ. 2.14 கோடியில் பயிா்க்கடன்
அந்தியூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு ரூ. 2.14 கோடிக்கு பயிா்க்கடன் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
அந்தியூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு ரூ. 2.14 கோடிக்கு பயிா்க்கடன் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
அந்தியூா் தொகுதியில் உள்ள கீழ்வாணி, குப்பாண்டாம்பாளையம், கொண்டையம்பாளையம், மாத்தூா், வெள்ளிதிருப்பூா், முரளி, சென்னம்பட்டி ஆகிய 6 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, கோபி சரக துணைப் பதிவாளா் ப.கந்தராஜா தலைமை வகித்தாா். அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம், பயிா்க் கடன், மகளிா் சுயஉதவிக் குழு, மாற்றுத் திறனாளி கடனுதவி உள்பட 207 பேருக்கு ரூ. 2.14 கோடிக்கு கடன்களை வழங்கினாா்.
அந்தியூா் கூட்டுறவு சாா்பதிவாளா் ப.சண்முகம், கோபி துணைப் பதிவாளா் அலுவலக கூட்டுறவு சாா் பதிவாளா் ஆா்.சுரேஷ், கூட்டுறவுச் சங்கத் தலைவா்கள், நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.