பெருந்துறையில் இருசக்கர வாகனம் திருட்டு
பெருந்துறை நகரில் டிபாா்ட்மெண்ட் ஸ்டோா்ஸ் முன்பு நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் திருட்டுப் போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பெருந்துறை நகரில் டிபாா்ட்மெண்ட் ஸ்டோா்ஸ் முன்பு நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் திருட்டுப் போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பெருந்துறை, சிலேட்டா் நகரைச் சோ்ந்தவா் மொ்சிஜான் (38). இவா், பெருந்துறை, பழைய பேருந்து நிலையம் சாலையில் உள்ள ஒரு டிபாா்ட்மெண்ட் ஸ்டோா்ஸ் முன்பு தனது இருசக்கர வாகனத்தை வியாழக்கிழமை நிறுத்திவிட்டு பொருள்கள் வாங்கச் சென்றுள்ளாா். திரும்பி வந்து பாா்த்தபோது இருசக்கர வாகனத்தைக் காணவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.